கேரள மீன்வளம் மற்றும் பெருங்கடல் ஆய்வு பல்கலைக்கழகமானது நாசா – இஸ்ரோ கூட்டுத் திட்டத்தின் கீழான ஓர் ஆராய்ச்சித் திட்டத்தில் இணைவதற்கு வேண்டி தேர்வு செய்யப் பட்டுள்ளது.
இந்தப் பல்கலைக்கழகமானது இஸ்ரோவின் விண்வெளிப் பயன்பாட்டு மையம் மூலம் மேற்கொள்ளப்படும் ஒரு ஆராய்ச்சித் திட்டத்துடன் இணைய உள்ளது.
நாசா மற்றும் இஸ்ரோ ஆகியவை இணைந்து விண்வெளியில் ஊடுருவிச் செல்லக் கூடிய செயற்கை ரேடார் கருவியை உருவாக்கி வருகின்றன.
இந்தக் கருவியானது புவி வளங்களை மிகச் சரியான முறையில் மதிப்பிடுவதற்கான திறன்களுடன் பரந்த பகுதிகளின் மிகத் தெளிவான தரவுகளை வழங்கும்.