நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தொடர் ஆனது கேள்வி நேரம் அல்லது தனிநபர் உறுப்பினர்களின் கோரிக்கைகள் ஏதும் இல்லாமல் செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பொதுவாக, ஒரு வருடத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல், மழைக்கால கூட்டத் தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என மூன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர்கள் நடைபெறும்.
ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தில் "சிறப்புக் கூட்டத் தொடர்" என்ற சொல்லானது பயன்படுத்தப்படவில்லை.
சில நேரங்களில் நாடாளுமன்ற அல்லது தேசியச் சாதனைகளை நினைவு கூருவது போன்ற குறிப்பிடத்தக்கச் சந்தர்ப்பங்களில் அரசினால் கூட்டப்பட்ட சிறப்பு கூட்டத் தொடர்களை இந்தச் சொல் குறிக்கிறது.
இருப்பினும், அரசியலமைப்பின் 352வது சட்டப்பிரிவானது (அவசரநிலைப் பிரகடனம்) "அவையின் சிறப்புக் கூட்டத்தொடர்" எனும் சொல்லைக் கொண்டுள்ளது.
இரு அவைகளிலும் இந்தக் கூட்டத் தொடரை மேற்கொள்வதற்கு, அந்தந்த அவையின் தலைவர்கள் அந்தந்த அவையின் நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்க வேண்டும்.