புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தின் தேசியப் புள்ளியியல் அலுவலகம் (NSO) ஆனது 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையான காலகட்டத்திற்கான நாட்டின் வேலைவாய்ப்புக் கண்ணோட்டத்தை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முறைசார் துறை வேலைவாய்ப்பு ஆனது 2021 ஆம் ஆண்டின் அக்டோபர் - டிசம்பர் மாத காலாண்டில் 0.4 மில்லியன் உயர்ந்துள்ளது.
2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை மொத்தம் 36,53,544 புதிய சந்தாதாரர்கள் மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் பெரு நிறுவனங்களால் அமல்படுத்தப்பட்ட தேசிய ஓய்வூதியத் திட்டங்களில் சேர்ந்து பங்களித்துள்ளனர்.
ஒன்பது துறைகளில் வேலை வாய்ப்பு பெற்ற மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 31.4 மில்லியன் ஆகும்.