இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 2019-20 ஆம் ஆண்டிற்கான நாட்டு நலப்பணித் திட்ட விருதுகளை வழங்கினார்.
இந்த விருதுகள் வழங்கப்படுவதன் முக்கிய நோக்கமானது இந்தப் பணியினை ஆற்றுபவர்களின் தன்னார்வச் சேவையின் சிறப்பான பங்களிப்புகளை அங்கீகரித்து கௌரவம் அளிப்பதே ஆகும்.
நாட்டு நலப் பணித் திட்ட விருதுகளானது 1993-94 ஆம் ஆண்டில் இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டது.
நாட்டு நலப்பணித் திட்டத்தின் வெள்ளி விழாவின் போது இந்த விருது நிறுவப்பட்டது.