TNPSC Thervupettagam

நிதிநிலை அறிக்கை 2020-21

February 4 , 2020 1629 days 733 0
  • 2020 - 21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்தார்.
  • இந்த நிதிநிலை அறிக்கையானது பின்வரும் மூன்று முக்கிய கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டது. அவையாவன:
    • இந்தியாவின் இலக்கு.
    • அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சி.
    • சமூக நலன் - மனிதாபிமானம் மற்றும் இரக்கம்.

நிதிநிலை அறிக்கை

  • இந்தியாவின் நிதிநிலை அறிக்கை என்பது நாட்டின் விரிவான வருடாந்திர நிதிநிலை அறிக்கையாகும்.
  • மத்திய நிதிநிலை அறிக்கையானது அரசாங்கத்தின் நிதி, அதன் வருவாய் மற்றும் செலவுகள் ஆகியவை பற்றிய விரிவான கணக்கைக் கொண்டுள்ளது.
  • இந்திய அரசியலமைப்பின் 112வது சரத்தில் குறிப்பிட்டுள்ள படி,
    • ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை, அந்த ஆண்டிற்கான அதன் மதிப்பிடப்பட்ட ரசீதுகள் மற்றும் செலவினங்களின் அறிக்கையை மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் சமர்ப்பிக்கின்றது.

சிறப்பம்சங்கள்

  • மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பொறுத்தவரை இந்தியா தற்பொழுது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கின்றது.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இயல்பு வளர்ச்சி - 10% (2020-21).
  • நிதிப் பற்றாக்குறை - மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.8% (2019-20), மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5% (2020-21).
  • வருவாய்ப் பற்றாக்குறை - மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7% (2020-21).
  • 15வது நிதி ஆணையமானது மாநிலங்களுக்கான மத்திய வரிகளின் மாநிலப் பங்கை ஒரு சதவீதம் குறைத்து 41% ஆக குறைத்துள்ளது.
  • புதிய வரி உச்ச வரம்புகள் மற்றும் குறைந்த வருமான வரி விகிதங்கள்.
  • மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு 5% சுகாதாரத் தீர்வை விதிக்கப் படும்.
  • வேளாண்மை தொடர்பான 16 செயல் திட்டங்களுக்கு ரூ. 2.83 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
  • வங்கி வைப்புக் காப்பீட்டுத் தொகையானது ஒரு வைப்புத் தொகைதாரருக்கு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்