TNPSC Thervupettagam

நிதியியல் கொள்கை குழு உறுப்பினர்கள்

October 7 , 2020 1384 days 610 0
  • இந்திய அரசானது பொருளாதார வல்லுநர்களான ஜெயந்த் R வர்மா, சசாங்க் பிஹைடு மற்றும் ஆசிமா கோயல் ஆகியோரை நிதியியல் கொள்கைக் குழுவில் (MPC - Monetary Policy Committee) உறுப்பினர்களாக நியமித்துள்ளது.
  • தற்போதைய MPC ஆனது நிதியியல் கொள்கைக் கட்டமைப்பு ஒப்பந்தத்தின் இறுதியாக்கத்தைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் இந்திய அரசினால் ஏற்படுத்தப் பட்டது.
  • இந்தக் கட்டமைப்பானது பணவீக்க இலக்கை அறிமுகப்படுத்தியது.
  • MPC ஆனது வங்கி விகிதம், ரெப்போ விகிதம், தலைகீழ் ரெப்போ விகிதம், நிதி ஒதுக்கீட்டு விகிதம் போன்ற நிதியியல் கூறுகளைப் பயன்படுத்தி நாட்டிற்கான நிதியியல் கொள்கைகளைக் கட்டமைக்கின்றது.
  • இந்தக் கூறுகள் நிதியியல் கொள்கைக் கூறுகள் எனப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்