TNPSC Thervupettagam

நிதி ஆயோக்கின் இலட்சிய மாவட்டங்களின் தரவரிசை

January 31 , 2020 1632 days 754 0
  • நிதி ஆயோக் அமைப்பானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான நாட்டின் இலட்சிய மாவட்டங்களின் தரவரிசையை வெளியிட்டுள்ளது.
  • உத்தரப் பிரதேசத்தின் சண்டௌலி மாவட்டமானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 57.6 மதிப்பெண்களைப் பெற்று இந்தப் பட்டியலில் முதலிடத்தைத் பிடித்துள்ளது.
  • இந்தத் தரவரிசையானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆறு வளர்ச்சிப் பகுதிகளில் 112க்கும் மேற்பட்ட இலட்சிய மாவட்டங்கள் மேற்கொண்ட செயல்பாடுகளின் முன்னேற்றத்தை கணக்கில் எடுத்துக் கொண்டது.
  • சுகாதாரம் & ஊட்டச்சத்து, கல்வி, விவசாயம் மற்றும் நீர்வளம், நிதியியல் உள்ளடக்கம், திறன் மேம்பாடு மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு ஆகியவை இந்த ஆறு வளர்ச்சிப் பகுதிகளாகும்.
  • இலட்சிய மாவட்டங்கள் திட்டமானது 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • ஒவ்வொரு மாதமும் இலட்சிய மாவட்டங்கள் தரவரிசைப்படுத்தப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்