TNPSC Thervupettagam

நிதி நிலைத்தன்மை அறிக்கை

July 8 , 2022 743 days 695 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, ஆண்டிற்கு இரண்டு முறை அதனால் மேற்கொள்ளப் படும் நிதி நிலைத்தன்மை அறிக்கையை (FSR) வெளியிட்டது.
  • இதன் படி மொத்த வாராக் கடன்களுடன் (GNPA) வங்கி அமைப்பின் சொத்துத் தரம் மேம்பட்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 7.4 சதவீதமாக இருந்த அதன் விகிதம் ஆனது 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • ஒரு வருடத்திற்கு முன்பு 67.6 சதவீதமாக இருந்த வாராக் கடன்களை ஈடு செய்ய வைக்கப் படும் நிதி விகிதம் ஆனது (PCR) 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 70.9 % ஆக மேம்படுத்தப் பட்டுள்ளது.
  • வாராக் கடன்களை ஈடு செய்ய வைக்கப்படும் நிதி விகிதம் என்பது, மோசமானக் கடன்களால் ஏற்படும் இழப்புகளுக்கு வங்கி ஒதுக்கும் நிதியின் சதவீதமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்