மணிப்பூரின் தலைநகரான இம்பாலுக்கு அருகில் சிவப்புக் குன்று எனும் இடத்தில் அமைந்துள்ள அமைதி அருங்காட்சியகத்திற்கு நிப்பான் அறக்கட்டளை நிதியளித்துள்ளது.
இரண்டாம் உலகப் போரின்போது நடைபெற்ற மிகக் கடுமையான போர்களில் ஒன்றான இம்பால் போரின் 75-வது நினைவு தினத்தைக் குறிப்பதற்காக இந்த நிதி வழங்கப்பட்டது.
1944-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் முதல் ஜுன் மாதம் வரை இம்பால் மற்றும் கோஹிமாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஜப்பானைச் சேர்ந்த வீரர்கள் சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவம் மற்றும் ஆங்கிலப் படைகளுடன் போரிட்டனர்.
இந்தப் போரின் 50-வது நினைவு தினத்தைக் குறிப்பதற்காக 1994-ல் சிவப்புக் குன்று எனும் இடத்தில் ஜப்பானியப் போர் நினைவகம் கட்டப்பட்டது.