புது தில்லியில் நடைபெற்ற புத்தாக்கம் மற்றும் நிர்வாகம் மீதான டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் மாநாட்டின் 3-வது பதிப்பின்போது நிர்வாகத்தில் புதுமைக்கான கலாம் விருது 2019-ஐ இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கய்யா நாயுடு வழங்கினார்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பின்வருவனவற்றிற்காக இந்த விருதைப் பெற்றுள்ளது.
சர்வதேச தரத்திலான வசதிகளுடன் நவீனப் போக்குவரத்து அமைப்பை அளிப்பது.
திட்டத்தின் முதல் கட்டத்தில் பசுமை முன்னெடுப்புகள், ஆற்றல் சேமிப்புத் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளுதல்.
2016 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று இந்த மாநாட்டின் முதலாவது மற்றும் முன்னோடிப் பதிப்பானது நடத்தப்பட்டது.