TNPSC Thervupettagam

நிலவின் தூசிப் படலத்தினை உருக்கிப் பயன்படுத்துதல்

November 25 , 2023 238 days 175 0
  • நிலவின் தூசியானது, எரிமலைப் பாறையால் ஆனதோடு மற்றும் அடர் சாம்பல் நிறம் கொண்டது.
  • அதன் கூர்மையான முனைகள் கொண்ட துகள்கள் மற்றும் அதன் ஒட்டும் பண்புகள் காரணமாக இது விண்வெளி ஆய்வுக் கருவிகளுக்கு ஆபத்துகளை ஏற்படுத்துகிறது.
  • ஆராய்ச்சியாளர்கள் பெரிய ஆடிகள் மூலம் ஒரே இடத்தில் செறிவூட்டப்பட்ட சூரிய ஒளியைப் பயன்படுத்தி, அதன் மூலம் வெற்றிகரமாக நிலவின் தூசிப் படலத்தினை உருக்கி திடமான பாறை அடுக்குகளாக மாற்றி, ஓடுகளை உருவாக்கியுள்ளனர்.
  • பரந்த நிலவு மண் பகுதிகளில் திடமான மேற்பரப்புகளை உருவாக்குவதற்காக இந்த ஓடுகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு, அதன் மூலம் அவை சாலைகள் மற்றும் தரையிறங்கும் திண்டுகளை அமைப்பதில் பயன்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்