ஜம்மு-காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தில் பள்ளித் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கான தேசிய முயற்சி (National Initiative for School Heads’ and Teachers’ Holistic Advancement - NISHTHA) என்ற செயலி தொடங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இதற்கான திட்டம் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டில் நாடு முழுவதும் தொடங்கப்பட்டது.
இது ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சிகள் மூலம் தொடக்க மட்டத்தில் கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பணியாகும்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தொடக்க மட்டத்தில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளின் தலைவர்களை உள்ளடக்கிய 42 லட்சம் பங்கேற்பாளர்களின் திறன்களை மேம்படுத்துதல் இதன் நோக்கமாகும் .