TNPSC Thervupettagam

நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் மீது புரிந்துணர்வு ஒப்பந்தம்

August 11 , 2018 2173 days 602 0
  • நிதி ஆயோக் அமைப்பும் இந்திய தொழிற்துறை கூட்டமைப்பும் (Confederation of Indian Industry - CII) நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் மீது புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. மேலும் இரண்டு அமைப்புகளும் 3 ஆண்டு கால கூட்டு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்த ஒப்பந்தம் புதுதில்லியில் நடைபெற்ற அரசு மற்றும் வணிக பங்குதாரர் மாநாடு நடைபெற்ற சமயத்தில் கையெழுத்திடப்பட்டது.
  • இம்மாநாடு நிதி ஆயோக், இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றால் இணைந்து நடத்தப்பட்டது.
  • இம்மாநாட்டின் ஒரு பகுதியாக, நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை உலகம் அடைவதற்கான இந்தியாவின் தீர்வுகள் என்ற அறிக்கையை இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு வெளியிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்