இந்திய உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதியான நீதிபதி M.பாத்திமா பீவி சமீபத்தில் காலமானார்.
உயர் மட்ட நீதித்துறையில் நியமிக்கப்பட்ட முதல் முஸ்லிம் பெண் நீதிபதியும் இவர் தான்.
இவர் வழக்குரைஞர் கழகத்தின் தங்கப் பதக்கம் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர் ஆவார்.
உச்ச நீதிமன்றம் தொடங்கப்பட்டதிலிருந்து, 71 ஆண்டுகளுக்கும் மேலாக, 1989 ஆம் ஆண்டில் M. பாத்திமா பீவி நியமிக்கப் பட்டதில் தொடங்கி இது வரையில் 11 பெண் நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஓய்வு பெற்ற பிறகு, அவர் முதலில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராகப் பணியாற்றினார்.
பின்னர் 1997 ஆம் ஆண்டில் அவர் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
ஆளுநர் பதவியை வகித்த முதல் முஸ்லிம் பெண் மற்றும் தமிழகத்தின் முதல் மற்றும் ஒரே பெண் ஆளுநர் இவரே ஆவார்.
இராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு கைதிகள் தாக்கல் செய்த கருணை மனுக்களை நிராகரித்த இவர் பின்னர் தமிழக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.