TNPSC Thervupettagam

நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி ஆணையம்

February 5 , 2024 166 days 266 0
  • நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தலைமையிலான ஆணையம் ஆனது, தனது அறிக்கையை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதால் விரைவில் சமர்ப்பிக்கவுள்ளது.
  • இந்த ஆணைக் குழுவானது வெளிநாடுவாழ் இந்தியர்களின் திருமணங்கள் தொடர்பான பிரச்சினைகளை ஆய்வு செய்யவும், சர்வதேச பொதுச் சட்டம் மற்றும் தனியார் சட்டங்கள் தொடர்பான சட்டமுறைக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் பணிக்கப் பட்டுள்ளது.
  • வெளிநாடுவாழ் இந்தியர்களின் திருமணங்களில் குழந்தைகள் மற்றும் மனைவிகளை கைவிடுதல், கடவுச்சீட்டைப் பறிமுதல் செய்தல், நாடு கடத்துதல், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் மனைவியைத் தவறாக நடத்துதல் போன்ற கடுமையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான கடுமையான நடவடிக்கைகளை இந்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
  • வெளிநாடுவாழ் இந்தியர்களின் திருமணங்களை பதிவு செய்வது மற்றும் வெளிநாட்டு திருமணச் சட்டம் பற்றிய 2019 ஆம் ஆண்டு மசோதாவையும் இந்த ஆணையம் ஆய்வு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்