TNPSC Thervupettagam

நீர்நிலைகளில் இருந்து சரளைக் கற்களை அகற்றுதல்

July 3 , 2024 15 days 141 0
  • குயவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நீர்நிலைகளின் படுகைகளில் இருந்து சரளைக் கற்களை இலவசமாக அகற்ற அனுமதிக்க முடியாது என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
  • அவர்கள் ஒரு திருத்தப்பட்ட நடைமுறையின் கீழ் மட்டுமே, இலவசமாக "களிமண் மற்றும் வண்டல்களை" தோண்டி எடுக்க முடியும்.
  • முன்னதாக, தமிழ்நாடு சிறு கனிமச் சலுகை விதிகள், 1959 ஆனது, மாநிலம் முழுவதும் உள்ள குளங்கள், கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் படுகைகளில் இருந்து இலவசமாக "களிமண், வண்டல் மற்றும் சரளைக் கற்களை" தோண்டி எடுக்க அனுமதி அளித்தது.
  • சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957 ஆனது, சரளைக் கற்களை "சிறு கனிமம் – சிறு பயன்பாட்டுக் கனிமம்" என்று குறிப்பிடுகிறது.
  • மாநில அரசானது 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், சவுடு என்ற சொல்லிற்குப் பதிலாக “சாதாரண மண் பொருள்” என்று மாற்றுவதற்காக என்று 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறு கனிமச் சலுகை விதிகளைத் திருத்தியமைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்