TNPSC Thervupettagam

நீர்மூழ்கிக் கப்பல் தினம் - டிசம்பர் 08

December 11 , 2018 2118 days 544 0
  • இந்தியக் கடற்படையானது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 08 அன்று நீர்மூழ்கிக் கப்பல் தினத்தை அனுசரிக்கிறது.
  • 1967 ஆம் ஆண்டில் இந்த தினத்தில் இந்தியாவின் முதலாவது நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் கல்வாரி (INS Kalvari) இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டதை நினைவுகூறும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • பாக்ஸ்டிரோட் வகையைச் சார்ந்த நீர்மூழ்கிக் கப்பலானது 29 ஆண்டுகால சேவைக்குப் பின்பு 1996 ஆம் ஆண்டு மே 03 அன்று இந்தியக் கடற்படையிலிருந்து ஓய்வு பெற்றது.
  • அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிஹந்த் நவம்பர் 05 அன்று இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டதன் மூலம் நீர், நில மற்றும் வான்வழி ஆகிய மூன்றிலும் அணு ஆயுத (Nuclear trait) வல்லமையை இந்தியா பெற்றுள்ளது நினைவில் கொள்ள வேண்டியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்