இந்தியப் பொதுச் சுகாதார அமைப்பை (Public Health Foundation of India - PHFI) சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் நடத்தப் பட்ட புதிய ஆய்வின் படி, தனியார் துறையில் நுண்ணுயிர்க் கொல்லி தொடர்பான மருந்துகளைப் பரிந்துரைக்கும் விகிதம் அதிகமாக உள்ளது.
வெளிநோயாளிகளுக்கு நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளின் பரிந்துரைப்பு விகிதங்கள் மற்றும் தனியார் துறையில் உள்ள நுண்ணுயிர்க் கொல்லி மருந்து முறைகள் ஆகியவை பற்றிய முதலாவது மதிப்பீடு இதுவாகும்.
தனியார் துறையானது அதிக அளவு நுண்ணுயிர்க் கொல்லி மருந்து விகிதங்களைக் கண்டுள்ளது (வருடத்திற்கு 1,000 நபர்களுக்கு 412 என்ற அளவில்).
இந்த விகிதமானது 0 முதல் 4 வயதுடைய குழந்தைகளிடையே (1,000 நபர்களுக்கு 636 என்ற அளவில்) அதிகமாகவும் 10 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்களிடையே மிகக் குறைவாகவும் (1,000 நபர்களுக்கு 280 என்ற அளவில்) காணப் படுகின்றது.