நேபாள நாடானது 2 டீசல் - எலக்ட்ரிக் பன்னலகு இரயில் அமைப்புகளை வாங்குவதற்காக கொங்கன் இரயில்வேயுடன் ஒரு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த இரயில்களானது பீகாரில் உள்ள ஜெய்நகர் மற்றும் நேபாளத்தில் உள்ள குர்தா ஆகிய நகரங்களை இணைக்கக்கூடிய 34 கிலோ மீட்டர் நீள இரயில்வே பாதையில் இயக்குவதற்குப் பயன்படுத்தப்பட விருக்கின்றது.
இந்த இரயில்களானது தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டித் தொழிற்சாலையினால் தயாரிக்கப்பட விருக்கின்றது.