நேபாளமானது கீழ் அருண் நீர்மின் திட்டத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவின் சட்லஜ் ஜல் வித்யூத் நிகாம் என்ற நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது
இந்த ஒப்பந்தம் கட்டுதல், சொந்தமாக்கிக் கொள்தல், இயக்குதல் மற்றும் உரிமையை மாற்றிக் கொடுத்தல் எனப்படும் BOOT என்ற மாதிரியின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது (BOOT - Build, Own, Operate, and Transfer).
இந்த திட்டத்தின் மூலம் 679 மெகாவாட் மின்சார உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது.
இது மாகாணம் 1 என்ற பகுதியின் போஜ்பூர் மற்றும் சங்குவாசபா மாவட்டங்களில் அமைந்திருக்கும்.