மத்தியப் பிரதேச அரசாங்கத்தின் மகிழ்ச்சித் துறையானது “நேர வங்கியை” அமைக்கப் பரிந்துரைத்துள்ளது.
இது “நேர அலகுகளை” நிதியாகப் பயன்படுத்தக் கூடிய ஒரு பரஸ்பர சேவைப் பரிமாற்றமாகும்.
தன்னார்வலர்களின் பட்டியலுடன் சமூக அளவிலான வங்கிகள் உருவாக்கப்பட இருக்கின்றன.
அவர்கள் வழங்கக்கூடிய “திறன்கள்” அல்லது “அவர்கள் வழங்கக்கூடிய சேவைகள்” ஆகியவற்றின் பட்டியல் இதில் குறிப்பிடப்பட இருக்கின்றன.
ஒரு வங்கி உறுப்பினருக்கு ஒரு சேவை தேவைப்படும் போதோ அல்லது ஒரு புதிய திறனைப் பெற விரும்பும் போதோ (எ.கா: ஒரு கிதார் வாசித்தல்), அவள் / அவன் அந்த திறனைக் கொண்டுள்ள மற்றொரு நபருடன் ஒரு மணி நேரம் மதிப்புள்ள நிதியைப் பரிமாறிக் கொள்ளலாம்.
இந்தக் கருத்தானது முதன்முதலில் 1827 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சின்சினாட்டி நேர மையத்தில் முன்மொழியப்பட்டது.
முதல் நேர வங்கி 1973 இல் ஜப்பானில் அமைக்கப்பட்டது.