இந்த 115 அடி நீள பாலத்தின் மூலம் ஜம்மு மற்றும் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சல் பிரிவில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்த கடைநிலை கிராமத்திற்கான ஒரு போக்குவரத்து இணைப்பினை இந்திய இராணுவம் உருவாக்கி உள்ளது.
மறைந்த மேஜர் பகத் சிங்கின் நினைவாக இந்தப் பாலத்திற்கு பகத் பாலம் என்று பெயரிடப் பட்டுள்ளது.
வீர் சக்ரா விருது பெற்ற மேஜர் சிங், 1965 ஆம் ஆண்டு போரில் இந்தப் பகுதியைப் பாதுகாக்கும் முயற்சியில் தனது உயிரைத் தியாகம் செய்தார்.