வடமேற்கு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட ஒரு கூட்டு அகழ்வாராய்ச்சியில், பாகிஸ்தான் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 3000 ஆண்டுகள் பழமையான பசீரா என்ற நகரத்தை கண்டுபிடித்தனர். இது அலெக்சாண்டர் விட்டுச் சென்ற நகரம் என்று நம்பப் படுகின்றது.
பசீரா நகரமானது கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஸ்வாட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 5,000 ஆண்டுகள் பழமையான நாகரிகத்திற்கும் அதன் கலைப் பொருட்களுக்கும் புகழ்பெற்று விளங்குகின்றது.
இந்த அகழ்வாராய்ச்சியின் போது, அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த இந்துக் கோவில்கள், நாணயங்கள், ஸ்தூபங்கள், பானைகள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப் பட்டன.