உள்துறை அமைச்சர் அமித்சா சோஹ்ராவில் (சிரபுஞ்சி) பிரச்சாரம் ஒன்றினைத் தொடங்கி வைத்தார்.
“பசுமைமாறா வடகிழக்குப் பகுதி” என்பது மரம் வளர்ப்பு மற்றும் காடு வளர்ப்பு போன்றவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்தப் பிரச்சாரத்திற்கு வழங்கப்பட்ட முழக்கம் ஆகும்.
இந்தப் பிரச்சாரத்தினை அசாம் ரைஃபிள்ஸ் மற்றும் மேகாலயா மாநிலம் ஆகியவை மேற்கொள்கின்றன.
மேலும் சோஹ்ரா பெருநகர குடிநீர் வழங்கும் திட்டத்தினையும் அவர் தொடங்கி வைத்தார்.