TNPSC Thervupettagam

பசுமை விருதுகள் 2018

June 24 , 2019 1853 days 821 0
  • சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகித்த மாவட்ட ஆட்சியர்கள், தொழிலகங்கள் மற்றும் அலுவலர்களுக்கு தமிழக அரசானது பசுமை விருதுகளை வழங்கியது.
  • இந்தப் பசுமை விருதுகளை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியமானது வழங்குகிறது.
  • இது தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சிறந்த பங்களிப்பை அளிக்கும் தொழிலகங்களை அங்கீகரிக்கிறது.
  • நீலகிரியின் ஆட்சியரான இன்னசன்ட் திவ்யா, மதுரையின் முன்னாள் ஆட்சியரான வீர ராகவ ராவ் மற்றும் திருநெல்வேலியின் முன்னாள் ஆட்சியரான சந்தீப் நந்தூரி ஆகியோர் 2018 ஆம் ஆண்டிற்கான விருதுகளைப் பெற்றனர்.
  • 2018 ஆம் ஆண்டிற்கான திறமையான முறையில் மாசுத் தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த தொழிலகங்களுக்கான விருது பின்வரும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
    • அதானி கடல்சார் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம்
    • ஜெய்விஷ்ணு ஜவுளி நிறுவனம்
    • ராம்கோ சிமெண்ட்ஸ்
  • கல்வி நிறுவனங்களுக்கான பசுமை விருதுகளானது பின்வரும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
    • ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் நிறுவனங்கள் – காஞ்சிபுரம்
    • மெப்கோ ஸ்க்லெங் பொறியியல் கல்லூரி
    • ராம்கோ வித்யாலயா – விருதுநகர் மாவட்டம்
  • பயன்படுத்தி வீசப்படும் நெகிழிகளைத் தடை செய்வதற்கான மாநில அரசின் உத்தரவை திறம்பட செயல்படுத்தியோர்க்கான பசுமை விருதுகள்
    • உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையர் – P. அமுதா
    • திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் – ஷில்பா பிரபாகர் சதீஷ்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்