பசையடுக்குப் பிரிவிற்கான வரையறைகளை நிர்ணயிக்கும் போது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முழுவதுமாக பொருளாதார அடிப்படையில், உட்பிரிவுகளாகப் பிரித்து வகைப்படுத்தி ஹரியானா அரசு இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.
ஹரியானா அரசின் இந்த அறிவிப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பசையடுக்குப் பிரிவினரை வருமான வரம்பின் அடிப்படையில் மட்டுமே வகைப் படுத்தப்பட்ட ஹரியானா அரசின் அறிவிப்பானது இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பில் அறிவித்ததை மீறியதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பசையடுக்குப் பிரிவின் வரம்பினை நிர்ணயிப்பதற்கு முன்பாக, பொருளாதார வரையறை மட்டுமின்றி சமூகம், கல்வி மற்றும் இதர காரணிகளுயும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.