TNPSC Thervupettagam

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல்

May 1 , 2023 447 days 277 0
  • பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், அகாலிதளத்தின் மூத்தத் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் (95 வயது) காலமானார்.
  • 1970-71; 1977-80; 1997-2002 மற்றும் 2007 முதல் 2017 ஆம் ஆண்டு வரை (தொடர்ந்து இரண்டு முறை) ஆகியவை பணியாற்றிய ஆண்டுகளாக இவர் ஐந்து முறை பஞ்சாபின் முதல்வராகப் பணியாற்றியுள்ளார்.
  • இந்திய அரசானது இவருக்கு 2015 ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமை விருதான பத்ம விபூஷன் விருதினை வழங்கியது.
  • 1970 ஆம் ஆண்டில், அவர் அந்த காலக்கட்டத்தில் ஒரு இந்திய மாநிலத்தின் இளம் முதல்வர் என்ற பெருமையினைப் பெற்றார்.
  • முதன்முதலில் 1957 ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநிலச் சட்டசபைக்கு உறுப்பினராக இவர் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • அதன் பிறகு இவர் ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்