பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் பியாஸ் நதியில் மட்டுமே காணப்படும் ஒரு அரிதான பாலூட்டியான சிந்து நதி டால்பின்களை பஞ்சாப் மாநிலத்தின் நீர்வாழ் விலங்காக அறிவித்துள்ளார்.
மேலும் அவர் குருநானக் தேவின் 550-வது பர்காஷ் பர்ப் (பிறந்தநாள் விழா) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கொண்டாட்டத்தை அனுசரிக்கும் வகையில் கஞ்ச்லி ஈரநிலத்தையும் காலி பெயின் புனித நதியையும் வனவிலங்குப் பாதுகாப்புச் சரணாலயமாக அறிவிக்க ஒப்புதலளித்திருக்கின்றார்.
மேலும் முதல்வர் கர்நாடக மாதிரியில் அமைந்த தனியார் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் வன விடுதிகளை ஏற்படுத்துவதை அமலாக்கம் செய்திடவும் ஒப்புதலளித்துள்ளார்.