இராணுவ செவிலியச் சேவைப் பிரிவின் துணைத் தலைமை இயக்குநரான படைப் பிரிவுத் தலைவர் (பிரிகேடியர்) S.V. சரஸ்வதி என்பவருக்கு 2020 ஆம் ஆண்டிற்கான தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
ஒரு செவிலிய நிர்வாகியாக இராணுவச்செவிலிய சேவையில் இவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக இவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
இவர் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.
இந்த விருதானது சுயநலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான தொழில்முறைக்காக ஒரு செவிலியர் பெறக் கூடிய மிக உயரிய அங்கீகாரம் ஆகும்.