TNPSC Thervupettagam

பணவழங்கீட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள்

March 20 , 2020 1584 days 537 0
  • பணவழங்கீட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கான (payment aggregators - PA) புதிய வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
  • பணவழங்கீட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கான மூலதனத் தேவைகளானது ஒருவர் உரிமத்திற்காக விண்ணப்பிக்கும் போது ரூ. 15 கோடியாகக் குறைக்கப்பட்டுள்து.
  • பியூர் – ப்ளே எனப்படும் அசல் பணவழங்கீட்டு இடைமுக நிறுவனங்கள் ஒரு நிறுவனமாகப் பிரிக்கப்பட்டு வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிறுவனங்களுக்கான தொழில்நுட்பச் சேவை வழங்குநர்களாக அடையாளம் காணப்பட இருக்கின்றன.
  • கடுமையான பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கடைபிடிக்கவும் அனைத்து KYC (Know Your Customer - உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) மற்றும் AML (Anti Money Laundering- பணமோசடித் தடுப்பு) விதிகளையும் பின்பற்றவும் PAக்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
  • அங்கீகாரத்தின் இரண்டாவது காரணியாக ஏடிஎம் ரகசியக் குறியீடு மூலம் ஆன்லைன் (நிகழ்நேர) பரிவர்த்தனைகளை PAக்கள் அனுமதிப்பதை ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. இதை சில பணவழங்கீட்டு இடைமுக நிறுவனங்கள் ஒரு சேவையாக வழங்குகின்றன.

பணவழங்கீட்டு ஒருங்கிணைப்பாளர்கள்
  • இந்த நிறுவனங்கள் மின் வணிக நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, அவற்றை வங்கிகளுடன் இணைக்கும் பணியை மேற்கொள்கின்றன.
  • பணவழங்கீட்டு ஒருங்கிணைப்பாளர்கள் இந்த நிறுவனங்களின் சார்பாக பணம் பெறுகின்றார்கள். இவர்கள் பணத்தைத் தங்கள் கணக்குகளுக்கு மாற்றுகின்றார்கள்.
  • பில்டெஸ்க், சி.சி. அவென்யூ, ஃபர்ஸ்ட்டேட்டா, ரேஸர்பே, கேஷ்ஃப்ரீ, பேடிஎம் பேமென்ட் கேட்வே மற்றும் பிற நிறுவனங்கள் போன்றவை மின்வணிக  நிறுவனங்களுக்கு பணவழங்கீட்டுச் சேவைகளை வழங்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்