TNPSC Thervupettagam

பணவழங்கீட்டு வங்கிகளின் அதிகபட்ச இருப்புத் தொகை

April 16 , 2021 1193 days 543 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது பணவழங்கீட்டு வங்கிகளில் ஒரு நாளின் முடிவில் இருக்கக் கூடிய அதிகபட்ச இருப்புத் தொகையின் வரம்பை மேம்படுத்தியுள்ளது.
  • இது ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.

பணவழங்கீட்டு வங்கிகள்

  • இது இந்திய ரிசர்வ் வங்கியால் கருத்தியல் செய்யப்பட்ட ஒரு புது மாதிரியான வங்கியாகும்.
  • இது மற்ற வங்கிகளைப் போல இருக்கும் அதே சமயத்தில் சிறிய அல்லது வரையறுக்கப்பட்ட அளவில் இயங்கும் ஒரு வங்கியாகும் (ஏர்டெல் கொடுப்பனவு வங்கி, இந்திய அஞ்சலக கொடுப்பனவு வங்கி போன்றவை).
  • இந்த வங்கிகளால் கடன் மற்றும் கடன் அட்டைகளை வழங்க முடியாது.
  • அதே சமயம் நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்குகள் இரண்டையும் இத்தகைய வங்கிகளால் இயக்க முடியும்.
  • இவை ஏடிஎம் அட்டைகள் அல்லது பற்று அட்டைகளை வழங்கலாம் மற்றும் இணைய வழியில் அல்லது கைபேசி மூலம் வங்கிச் சேவையை வழங்கலாம்.
  • பாரதி ஏர்டெல் நிறுவனமானது இந்தியாவின் முதல் பணவழங்கீட்டு வங்கியை அமைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்