TNPSC Thervupettagam

பண மோசடி – பொது பதிவேடு

January 21 , 2018 2372 days 747 0
  • பிரிட்டனின் வணிகம், ஆற்றல் மற்றும் தொழிற்துறை உத்திகளுக்கான அரசுத் துறை பணமோசடிக்கு எதிரான உலகின் முதல் பொது பதிவேட்டை (Public register against Money laundering) தொடங்கியுள்ளது.
  • பிரிட்டனின் சொத்திற்கான சந்தை வழியே பண மோசடி செய்யும் குற்றவாளிகள் மேல் கடும் நடவடிக்கை எடுப்பதற்காக பிரிட்டன் அரசு இந்தப் பதிவேட்டை தொடங்கியுள்ளது.
  • ஷெல் நிறுவனங்களைப் (Shell Company) பயன்படுத்தி இங்கிலாந்தில் சொத்துகளை வாங்க முயற்சிக்கும் குற்றவாளிகளுக்கு சட்ட விரோதமாக இருக்கக் கூடிய வாய்ப்புகளை குறைப்பதற்காக இப்பதிவேடு தொடங்கப்பட்டுள்ளது.
  • இங்கிலாந்தில் சொத்துகளை வைத்திருக்கும் அல்லது வாங்கவிருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களின் முதன்மை உரிமையாளரைப் பற்றிய தகவல்களை இந்த பதிவேட்டில் முதலில் வழங்க வேண்டியுள்ளதால்  இதன் மூலம் பணமோசடி நடைபெறுவதை இந்த பதிவேடு தடுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்