ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள “பதாரி பழங்குடி”, “கத்தா பிராமணர்”, “கோலி” மற்றும் “பஹாரி இனக்குழு” ஆகிய நான்கு சமூகத்தினரைப் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்காக மத்திய அரசு ஒரு மசோதாவை அறிமுகப் படுத்தியுள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் மலைப்பாங்கான தொலைதூரப் பகுதியில் பத்தாரிகள் வாழ்கின்றனர்.
இந்த ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள மற்ற முக்கியப் பட்டியலிடப்பட்டப் பழங்குடியின சமூகங்கள் பூஞ்ச், ரஜோரி, ரியாசி, குப்வாரா, கந்தர்பால், அனந்த்நாக், கிஷ்த்வார் மற்றும் பந்திபோரா மாவட்டங்களில் அதிகம் காணப்படும் பேகர்வால்கள் மற்றும் குஜ்ஜார்களாகும்.
இவர்களில் பேகர்வால் இனத்தவர்கள் என்போர் பெரும்பாலும் நாடோடி வாழ்விகளாக உள்ளனர்.
டோக்ராஸ் மற்றும் காஷ்மீரி இனத்தவர்களையடுத்து குஜ்ஜார்-பேகர்வால் இனத்தவர் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள மூன்றாவது பெரிய இனக்குழுவினராவர்.
இந்த இனத்தவர்க்கு 1991 ஆம் ஆண்டில் சிப்பிஸ் மற்றும் காடிஸ் ஆகிய இரண்டு சிறுபான்மைக் குழுக்களுடன் சேர்த்துப் பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் அந்தஸ்து வழங்கப் பட்டது.
இது இந்தச் சமூகங்களுக்கு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதற்கு வழி வகை செய்தது.