TNPSC Thervupettagam

பத்ம பூஷன் விருது பெற்ற வினோத் ராய் எழுதிய புத்தகம்

May 1 , 2022 814 days 381 0
  • பத்ம பூஷன் விருது பெற்ற வினோத் ராய் "Not Just A Nightwatchman: My Innings in the BCCI" என்ற தலைப்பில் ஒரு புதியப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
  • இவர் இந்தியாவின் முன்னாள் (11வது) தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் ஆவார்.
  • உச்ச நீதிமன்றம் நியமித்த இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகிகள் குழுவில் தான் ஆற்றிய 33 மாத காலப் பணி அனுபவங்களை இந்தப் புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • இந்தப் புத்தகத்தை ரூபா பப்ளிகேஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
  • குடிமைப் பணிக்காக அவருக்கு 2016 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
  • 2016 ஆம் ஆண்டில் இவர் வங்கிகள் வாரியப் பணியகத்தின் முதல் தலைவராக நியமிக்கப் பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்