TNPSC Thervupettagam

பந்தை சேதப்படுத்திய விவகாரம்

April 19 , 2018 2283 days 726 0
  • கேப்டவுனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிற்கெதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாளில் ஆஸ்திரேலியாவின் கேமருன் பேன்கிராஃப்ட், பந்தின் தன்மையை மாற்றுவதற்காக மணல் காகிதத்தைப் (Sand paper) பயன்படுத்திய காட்சியால் பிடிபட்டார்.
  • ஸ்டீவ் ஸ்மித் டேவிட் வார்னர் மற்றும் பேன்கிராஃப்ட் மூவரும் விளையாட்டிற்கு கேட்ட பெயரை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டனர்.
  • ஸ்மித் மற்றும் வார்னர் ஆஸ்திரேலியாவின் எல்லா விதமான உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் எல்லா சர்வதேச போட்டிகளிலும் 12 மாத கால அளவிற்கும், பேன்கிராஃப்ட் 9 மாத கால அளவிற்கும் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்த வகையில் அணியின் பயிற்சியாளர் டேரன் லீமன் தந்து பதவியிலிருந்து விலகியுள்ளார்.

பந்தை சேதப்படுத்துதல்

  • பந்து வீச்சாளர்களுக்கு உதவிடும் வகையில், பந்தின் காற்றியக்க திசையில் செல்லும் தன்மையில் குறுக்கீடு செய்வதற்காக கிரிக்கெட் போட்டியில் பயன்படுத்தப்படும் பந்தின் தன்மையை மாற்றியமைக்கும் செயலே பந்தை சேதப்படுத்துதல் ஆகும்.
  • இந்த செயலானது பந்தின் புறப்பரப்பை மணல்காகிதத்தைக் (அல்லது வேறு ஏதாவதொரு பொருள் கொண்டு) கொண்டு தேய்மானம் அடையச் செய்வது அல்லது, பந்தின் புறப்பரப்பை நகத்தால் உராய்ப்பது அல்லது தரையில் தேய்த்தல் ஆகியவற்றை உள்ளடக்கும்.
  • மெல்பர்ன் கிரிக்கெட் கழகத்தின் கிரிக்கெட் சட்டத்தின், ஷரத்து 41, துணைப்பிரிவு 3-ன் படி கிரிக்கெட் வீரர்கள் வேறு எந்தவொரு புறப் பொருள்களைப் பயன்படுத்தாமல் பந்தின் பரப்பை மெருகேற்ற அனுமதிக்கப்படுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்