சிக்கிம் மாநிலத்தின் வடக்குப் பகுதியில், இந்திய இராணுவம் மற்றும் பாதுகாப்புப் புவிசார் தகவலியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தியாவின் முதல் பனிச்சரிவு கண்காணிப்பு ரேடார் கருவியினை நிறுவியுள்ளன.
இந்த ரேடார் கருவியானது, இந்தியாவிலேயே இது போன்ற முதல் வகை கருவியாகும்.
இந்தக் கருவியானது பனிச்சரிவு ஏற்பட்ட மூன்று வினாடிகளுக்குள் அதனைக் கண்டு அறியும் திறன் கொண்டது.
இது படை வீரர்களின் உயிரைக் காப்பாற்றவும், மிக உயரமானப் பகுதிகளில் உள்ள கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படுவதைக் குறைக்கவும் உதவும்.
பனிச்சரிவு ரேடார் கருவியானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பாதுகாப்பு புவிசார் தகவலியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தினால் செயலாக்கப் பட்டது.