இந்திய மருத்துவ ஆராய்ச்சிச் சபையானது "பயன்பாட்டுச் சோதனை உத்தி" குறித்த புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
நோய்த் தொற்று உள்ளதா என யாருக்குப் பரிசோதனை செய்ய வேண்டும், யாருக்குச் செய்யக்கூடாது என்பதினை இது நிர்ணயிக்கும்.
இந்த வழிகாட்டுதல்களின்படி, அறிகுறியற்ற நபர்கள் மற்றும் கோவிட் நோயாளிகள் ஆகியோருடன் தொடர்புடையவர்கள், இணை நோய் அல்லது வயதின் அடிப்படையில் “அதிக ஆபத்துள்ள நபர்கள்” என அடையாளம் காணப்பட்டாலன்றி, பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை.