TNPSC Thervupettagam

பயிற்சி மையங்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள்

January 24 , 2024 178 days 246 0
  • கல்வி அமைச்சகம் ஆனது தனது வழிகாட்டுதல்கள் வழியாக, பொருத்தமான சட்ட கட்டமைப்பின் மூலமாக பயிற்சி மையங்களை ஒழுங்குமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • விதிகள் மீறப்படுவது கண்டறியப்பட்டால் பயிற்சி நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட இந்த விதி முன்மொழிகிறது.
  • அனைத்துப் பயிற்சி மையங்களும் தற்போதைய வழிகாட்டுதல்களின்படி தங்களது மையங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
  • பல கிளைகளைக் கொண்ட பயிற்சி மையங்களுக்கு, ஒவ்வொரு கிளையும் தனித்தனி பயிற்சி மையமாகக் கருதப்படும்.
  • போட்டித் தேர்வுகளில் தரவரிசை அல்லது மதிப்பெண்கள் குறித்து தவறான உரிமைக் கோரல்களை வெளியிடவும் மையங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது 16 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பயிற்சி நிறுவனங்களில் சேர அனுமதி வழங்கப்பட மாட்டாது.
  • இந்த வழிகாட்டுதல்களின் நிபந்தனைகளுக்கேற்ப பயிற்சி மையங்களில் ஆலோசனை வழங்கீட்டு அமைப்பு இருப்பதை அவை உறுதி செய்ய வேண்டும்.
  • ஒரு மாணவர் ஒரு படிப்பை முடிப்பதற்கு முன் அதிலிருந்து விலகினால், அவர்களுக்கு 10 நாட்களுக்குள் விகிதாச்சார அடிப்படையில் அதற்கான கட்டணத்தின் பகுதியானது திருப்பித் தரப்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்