தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் நடைபெறவிருக்கும் பயோ ஆசியா 2020ன் 17வது பதிப்பில் சுவிட்சர்லாந்து நாடு பங்காளர் நாடாக கலந்து கொள்ள இருக்கின்றது.
இந்த நிகழ்வின் கருப்பொருள், “நாளைய தினத்திற்கான (எதிர் காலம்) இன்றைய தினம்” என்பதாகும்.
2018 ஆம் ஆண்டில், இந்தியாவானது சுவிட்சர்லாந்தின் 8வது பெரிய வர்த்தகப் பங்காளர் நாடாக இருந்தது. இந்த இரு நாடுகளின் மொத்த வர்த்தகத்தின் மதிப்பு 19.7 பில்லியன் டாலர் ஆகும்.