ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் தண்ணீர் மீதான சுற்றுச்சூழல் சார் ஆலோசனைக் குழுவானது தன்னளவில் இது போன்ற முதல் வகையிலான தனது “மாவட்ட அளவிலான பருவநிலைப் பாதிப்பு மதிப்பீடு (அ) பருவநிலை பாதிப்புக் குறியீட்டினை” மேற் கொண்டுள்ளது.
இது இந்தியாவில் உள்ள 140 மாவட்டங்களைப் புயல், வெள்ளம், வெப்ப அலைகள், வறட்சி போன்ற தீவிரமான வானிலைகளுக்கு எவ்வளவு பாதிப்பிற்கு உள்ளாகின்றன என்று மதிப்பிட்டுள்ளது.
இந்த மதிப்பீட்டின்படி, இந்தியாவில் வெள்ளம், வறட்சி மற்றும் புயல் போன்ற தீவிரப் பருவநிலை நிகழ்வுகளுக்கு மிகவும் பாதிப்புள்ளாகக் கூடியதாக அசாம், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் பீகார் ஆகியவை உள்ளன.
அசாமில் உள்ள தேமாஜி மற்றும் நகாவோன், தெலங்கானாவிலுள்ள கம்மம், ஒடிசாவிலுள்ள கஜபதி, மகாராஷ்டிராவிலுள்ள சாங்கிலி, ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விஜய நகரம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள சென்னை ஆகியவை பருவநிலையினால் அதிகம் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களாகும்.