TNPSC Thervupettagam

பருவநிலை மாற்றம் மற்றும் தண்ணீர்ப் பற்றாக்குறை

November 19 , 2023 244 days 163 0
  • தெற்காசியாவில் ஏறக்குறைய 350 மில்லியன் குழந்தைகள் “அதிகபட்ச அல்லது மிக அதிகபட்ச தண்ணீர்ப் பற்றாக்குறை நிலையுடன்” போராடி வருகின்றனர்.
  • இது உலகின் அனைத்துப் பகுதிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையாகும்.
  • மோசமான தண்ணீர்ப் பற்றாக்குறையானது பருவநிலை மாற்றத்தின் பல்வேறு தாக்கங்களினால் மேலும் மோசமடைந்துள்ளது.
  • ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், இந்தியா, நேபாளம், மாலத்தீவுகள், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய எட்டு நாடுகள் அடங்கியப் பிராந்தியத்தில் உலகின் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமான குழந்தைகள் காணப்படுகின்றனர்.
  • ஆனால் இந்தப் பிராந்தியம் ஆனது, உலகளாவியப் புதுப்பிக்கத்தக்க நீர் வளத்தில் நான்கு சதவீதத்தினை மட்டுமே கொண்டுள்ளது.
  • கடந்த ஆண்டு, தெற்காசியாவில் 45 மில்லியன் குழந்தைகளுக்கு அடிப்படை குடிநீர் வசதிகள் கிடைக்கப்பெறவில்லை.
  • தெற்காசியாவைத் தொடர்ந்து கிழக்கு & தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு & மத்திய ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் முறையே 130 மில்லியன் மற்றும் 102 மில்லியன் குழந்தைகள் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்