8வது பருவநிலை வெளிப்படைத்தன்மை அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப் பட்டது.
சீனா, இந்தோனேசியா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகியவை புதைபடிவ எரி பொருட்களுக்கான அதிக மொத்த மானியங்களைக் கொண்ட G20 அமைப்பின் உறுப்பினர்கள் நாடுகள் ஆகும்.
2021 ஆம் ஆண்டில், மின்சாரம் மற்றும் மனை விற்பனைத் துறையில் மாசு உமிழ்வு பெருந் தொற்றுக் காலத்திற்கு முந்தைய அளவை விட அதிகமாக இருந்தது.
சீனா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில், இந்தத் துறைகளில் பதிவான தனிநபர் உமிழ்வு தற்போது 2019 ஆம் ஆண்டின் அளவை விட அதிகமாக உள்ளது.
ஐக்கியப் பேரரசு (67 சதவீதம்), ஜப்பான் (48 சதவீதம்) மற்றும் மெக்சிகோ (40 சதவீதம்) ஆகியவை புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பங்கில் அதிக அதிகரிப்பு கொண்ட நாடுகள் ஆகும்.
ரஷ்யா (16 சதவீதம்) மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் (14 சதவீதம்) மிகக் குறைந்த அதிகரிப்பு ஆனது பதிவானது.
2021 ஆம் ஆண்டில் பதிவான கடுமையான வெப்பம் காரணமாக சேவை, உற்பத்தி, விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் இந்தியா 159 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வருமான இழப்பைச் சந்தித்துள்ளது.
இது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 சதவீதமாகும்.
இந்தியாவில் பதிவான அதிக வெப்ப வெளிப்பாடு 1990-1999 ஆகிய ஆண்டுகளில் இருந்து 39 சதவீதம் அளவிலான அதிகரிப்புடன், 167 பில்லியன் அளவிலான திறன்மிகு உழைப்பு நேரத்தை இழக்கச் செய்தது.
உலக வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், நாட்டில் தொழிலாளர் உற்பத்தித் திறன் 1986-2006 ஆம் ஆண்டுகளில் இருந்த அளவில் இருந்து 5 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.