உத்தரப் பிரதேச மாநில அரசானது, ‘பஹல்’ எனப்படும் இயங்கலை கிராமப்புறக் கல்வி முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டமானது, இடைநிலைக் கல்வித் துறை மற்றும் கான்பூரின் இந்தியத் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு கூட்டாண்மை மூலம் உருவாக்கப் பட்டது
இது இயங்கலைத் தளங்கள் மூலம் கிராமப்புறச் சமூகத்தினருக்குக் கல்வியை வழங்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 10 அரசுப் பள்ளிகளில் இந்தக் கிராமப்புற இயங்கலைக் கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது.