பைசர் நிறுவனத்தின் ‘பாக்ஸ்லோவிட்’ எனும் கோவிட்-19 வைரஸ் எதிர்ப்பு மருந்தானது அமெரிக்காவில் அதன் அவசரகாலப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் பெற்றுள்ளது.
இது அமெரிக்காவின் அங்கீகாரம் பெற்ற முதல் உள்நாட்டு கோவிட் சிகிச்சையாக மாறியுள்ளது.
இது 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் மீது பயன்படுத்தப்படும்.
ஐக்கிய இராஜ்ஜியத்தின் மருந்துகள் மற்றும் சுகாதார நலப் பொருட்கள் ஒழுங்குமுறை முகமையானது இந்த மருந்திற்கு ஒப்புதல் வழங்கியது.
அமெரிக்க ஒழுங்குமுறை அமைப்புகளானது மெர்க் நிறுவனத்தின் மோல்னுபிராவிர் மருந்தினையும் கோவிட் சிகிச்சைக்கு அங்கீகரித்துள்ளது.
இந்தியாவின் பெரிய மருந்து உற்பத்தி நிறுவனங்களான சன் பார்மா, டாக்டர் ரெட்டிஸ் மற்றும் ஆப்டிமஸ் பார்மா ஆகிய மருந்து நிறுவனங்களும் இந்த கோவிட்-19 மாத்திரைகளைத் தயாரிப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகின்றன.