புகழ்பெற்ற ‘பாசுமதி’ புவிசார் குறியீடு கொண்ட மாநிலங்களின் பட்டியலில் சேருவதற்கான மத்தியப் பிரதேச அரசின் முயற்சியானது மீண்டும் தோல்வி அடைந்துள்ளது.
தன்னுடைய மாநிலத்தின் சில பகுதிகளில் பயிரிடப்படும் பாசுமதி நெல்லுக்குப் புவிசார் குறியீடு (geographical indication - GI) வழங்கக் கோரிய மத்தியப் பிரதேச மாநிலத்தின் மனுவை மதராஸ் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஒரே பொருளுக்கு இரண்டு GI சான்றிதழ் பதிவுகளை வழங்க முடியாது என்று இந்த நீதிமன்றம் கூறியுள்ளது.
பின்னணி
2010 ஆம் ஆண்டு மே மாதத்தில் பஞ்சாப், ஹரியானா, தில்லி, இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீரின் சில பகுதிகளில் மட்டுமே வளர்க்கப்படும் பாசுமதிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் மத்தியப் பிரதேசம் தனது மாநிலப் பகுதியின் கீழ் உள்ள 13 மாவட்டங்களைப் பாரம்பரிய பாசுமதி வளரும் பகுதிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரியது.
தொழில்துறை சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் உள்ள அறிவுசார் சொத்துரிமைகளின் (intellectual property rights - IPRs) ஒரு அங்கமாக புவியியல் குறியீடுகள் உள்ளன.
GI ஆனது உலக வர்த்தக அமைப்பின் (WTO - World Trade Organisation) அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள் (TRIPS - Trade-Related Aspects of Intellectual Property Rights) மீதான ஒப்பந்தத்தால் நிர்வகிக்கப் படுகின்றது.
இந்தியாவில், புவிசார் குறியீட்டுப் பதிவு ஆனது பொருட்களின் புவிசார் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 1999 ஆல் நிர்வகிக்கப் படுகின்றது. இது 2003 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.
புவிசார் குறியீடு வழங்கப்பட்ட முதலாவது இந்தியப் பொருள் டார்ஜிலிங் தேநீர் ஆகும். இதற்கு 2004-05 ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.