TNPSC Thervupettagam

பாண்டுங் மாநாட்டின் 70 ஆம் ஆண்டு நிறைவு

April 29 , 2025 13 hrs 0 min 12 0
  • இந்த ஆண்டு ஆனது 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 முதல் 24 ஆம் தேதி வரையில் இந்தோனேசியாவின் பாண்டுங் நகரில் நடைபெற்ற முதல் ஆசிய-ஆப்பிரிக்க உச்சி மாநாட்டின் 70 ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் சுமார் 29 அரசாங்கங்களின் பிரதிநிதிகள் இந்தோனேசியாவின் பாண்டுங் நகரில் கூடியிருந்தனர்.
  • அவர்கள் அமைதி மற்றும் பனிப்போர், பொருளாதார வளர்ச்சி மற்றும் காலனித்துவ நீக்கத்தில் வளர்ந்து வரும் நாடுகளின் பங்கு குறித்து விவாதித்தனர்.
  • இதற்கு இந்தோனேசியா, மியான்மர், இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் துணைப் பங்காளர்களாக இருந்தன.
  • இந்த மாநாடு மற்றும் அதன் இறுதித் தீர்மானம் ஆனது பனிப்போரின் போதான அணி சேரா இயக்கத்திற்கான அடித்தளத்தினை அமைத்தன.
  • அணிசேரா இயக்கமானது சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஆன பனிப்போரின் பின்னணியில் 1961 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • அணிசேரா இயக்கத்திற்கு முறையான ஸ்தாபன சாசனம் அல்லது ஒப்பந்தம் இல்லை, மேலும் அதற்கு நிரந்தரச் செயலகமும் இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்