TNPSC Thervupettagam

பாதுகாப்புத் துறைக் கண்காட்சி 2020 (DefExpo)

February 7 , 2020 1633 days 693 0
  • 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை லக்னோவில் (உத்தரப் பிரதேசம்) முதல் முறையாக பாதுகாப்புத் துறைக் கண்காட்சியானது நடைபெறுகின்றது.
  • இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் ஒரு முதன்மை நிகழ்வாகும்.
  • ஒரு மிகப்பெரிய பாதுகாப்புக் கண்காட்சியான இந்தப் பாதுகாப்புத் துறைக் கண்காட்சியின் 11வது பதிப்பு இதுவாகும்.
  • இந்த நிகழ்வின் 10வது பதிப்பானது சென்னையில் (தமிழ்நாடு) 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
  • 2020 ஆம் ஆண்டின் இந்த நிகழ்வின் கருப்பொருள் ‘இந்தியா: வளர்ந்து வரும் பாதுகாப்பு உற்பத்தி மையம்’ என்பதாகும்.
  • இது ‘பாதுகாப்புத் துறையில் டிஜிட்டல் மாற்றம்’ என்பதின் மீது கவனம் செலுத்துகின்றது.
  • பாதுகாப்புத் துறைக் கண்காட்சி - 2020 ஆனது இந்தியாவின் விண்வெளி, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நலன்களின் விரிவான வகைகளைக் காண்பிக்க இருக்கின்றது.
  • இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக 5வது இந்திய ரஷ்ய ராணுவத் தொழில் துறை மாநாடானது நடைபெற இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்