பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக், ராஜிந்தர் சிங் தாத் (101) அவர்களுக்கு பாயிண்ட்ஸ் ஆஃப் லைட் விருது வழங்கி கௌரவித்தார்.
இரண்டாம் உலகப் போரில் போரிட்டு, இன்றும் உயிர் வாழ்ந்து வரும் சீக்கிய வீரர்களில் தத் ஒருவர் ஆவார்.
இந்த விருது தத் அவர்களின் மகத்தானச் சேவையையும், இந்த வீரர்களை ஒன்றிணைக்க அவர் மேற்கொண்ட இடைவிடாத முயற்சிகளையும் அங்கீகரிக்கிறது.
இது அவர்கள் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தினை அங்கீகரிக்கச் செய்து சமூக ரீதியான பல்வேறு சவால்களுக்கு புதுமையான தீர்வுகளைக் கண்டறிய மற்றவர்களை ஊக்குவிக்கிறது.