மருத்துவர்களின் கவனக்குறைவான செயல்கள் ஆனது, நோயாளியின் மரணத்திற்கு வழி வகுத்தால் சிறைத் தண்டனை பெறுவதிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப் பட மாட்டாது.
தற்போது, 1860 ஆம் ஆண்டு இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 304A என்ற பிரிவின் கீழ், மரணத்திற்கு வழி வகுக்கும் கவனக்குறைவான செயல்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
இந்தியத் தண்டனைச் சட்டத்திற்கு மாற்றாக அமையும் பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா, இது போன்ற செயல்களுக்கான தண்டனையை ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கிறது.
ஆனால், மருத்துவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை என்ற குறைந்தபட்சத் தண்டனை கிடைக்கும் என்று அது குறிப்பிடச் செய்கிறது.
எனினும், நோயாளியின் நலனுக்காக அவர்களின் சம்மதத்துடன் நல்ல நம்பிக்கையில் மேற்கொள்ளப்படும் செயல்களின் விளைவாக ஏற்படும் மரணங்களுக்கான குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து மருத்துவர்களுக்கு ஏற்கனவே பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது.