பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூர், நாட்டின் உயரியக் குடிமை விருதான பாரத ரத்னாவுக்கு (மரணத்திற்குப் பின்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று அதற்காக சிறையிலும் அடைக்கப்பட்டார்.
சுதந்திர இந்தியாவில், 1952 ஆம் ஆண்டில் அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
1952 ஆம் ஆண்டில் அவர் முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்ட போது, ஆஸ்திரிய நாட்டிற்கான அதிகாரப்பூர்வ தூதுக்குழுவில் ஒருவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1977 ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்ட அவர், 1984 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநிலச் சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த போதும், 1988 ஆம் ஆண்டில் அவர் இறக்கும் வரை சட்டமன்ற உறுப்பினராகவே இருந்தார்.
தாக்கூர் 1967 ஆம் ஆண்டு மார்ச் 05 முதல் 1968 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி வரை பீகார் மாநில கல்வி அமைச்சராக இருந்தார்.
அவர் சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சியின் மூலம் 1970 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மாநிலத்தின் முதலமைச்சரானார், ஆனால் அவரது அரசாங்கம் ஆறு மாதங்களுக்குப் பிறகு வீழ்ச்சியடைந்தது.
அவர் 1977 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மீண்டும் பதவிக்கு வந்தார், ஆனால் சுமார் இரண்டு ஆண்டுகளில் அவர் அதிகாரத்தை இழந்ததால் அவரது முழு பதவிக்காலத்தை முடிக்க முடியவில்லை.
1970 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், பீகார் மாநில அரசாங்கம் முங்கேரி லால் என்ற ஆணையத்தினை நியமித்தது.
1976 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியான அதன் அறிக்கையானது, 128 "பிற்படுத்தப்பட்ட" சமூகங்களை பட்டியலிட்ட நிலையில் அவற்றில் 94 சமூகங்கள் "மிகவும் பிற்படுத்தப் பட்ட பிரிவுகள்" என அடையாளம் காணப்பட்டது.
தாகூர் அரசு ஆனது இந்த ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தியது.
‘கர்பூரி தாகூர் சூத்திரம்’ ஆனது 26% இடஒதுக்கீட்டை வழங்கியது.
இதில் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 12% பங்கும், அவர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 8 சதவீதமும், பெண்களுக்கு 3 சதவீதமும், "உயர் சாதிப் பிரிவினைச்" சேர்ந்த ஏழைகளுக்கு 3 சதவீதமும் வழங்கப் பட்டது.
இதன் காரணமாக அவரது அரசாங்கம் வீழ்ச்சியுற்றது என்பதோடு, இதனால் அவர் உயர் சாதியினரின் பெரும் எதிர்ப்பினை எதிர்கொள்ள நேர்ந்தது.